×

பேரணாம்பட்டு, கே.வி குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பேரணாம்பட்டு, ஜன.20: பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள மையத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் தலைமை தாங்கி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மருத்துவ அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். இதேபோல், நகராட்சியில் அமைக்கப்பட்ட 31 மையங்களிலும் சுமார் 6 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம்: அதேபோல், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை கே.வி.குப்பம் எம்.எல்.ஏ லோகநாதன் தொடங்கி வைத்தார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில் 11 ஆயிரத்து 170 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. .

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு