×

தேசிய சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் நடிகை ரோஜா அட்வைஸ்

திருமலை, ஜன.20: சித்தூரில் நடந்த தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என நடிகை ரோஜா கூறினார். நாடு முழுவதும் 31வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகையும், ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி குழு தலைவருமான ரோஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பைக் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து மொபட்டில் ஊர்வலமாக சென்றார்.

அப்போது அவர் கூறுகையில், ‘வாகனங்களில் அதிவேகமாக செல்வதைக் காட்டிலும் உயிர் மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனத்தை வீட்டில் இருந்து எடுக்கும் போது, தங்களை நம்பி குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்'''' எனக்கூறினர்.

Tags : Actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!