×

வீரகனூர் பகுதியில் புகார் அளித்தவர் மீது மீண்டும் தாக்குதல்

கெங்கவல்லி, ஜன.20: வீரகனூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து புகார் அளித்த நபர் மீது மீண்டும் ஒரு தரப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு காணும் பொங்கல் தினத்தில் மாரியம்மன் ஊர்வலம் சுற்றி வருவது வழக்கம். சாமி ஊர்வலம் முடிந்து ஒரு தரப்பினர் வீட்டுக்குச் சென்றவர்களை மற்றொரு தரப்பினர் வீடு புகுந்து தாக்கினர். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதை தொடர்ந்து வீரகனுர் போலீசார் வேப்பம்பூண்டி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அடிபட்ட செந்தில் என்பவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு தரப்பை சேர்ந்த சிலர், உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கூறி, செந்திலை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது குறித்து மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பாஸ்கரபாபு வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Tags : Veeraganur ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...