×

கோஷ்டி மோதலில் பெண்கள்

உள்பட 19 பேர் காயம்ஆத்தூர், ஜன.20: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், தமையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கமுத்து, மாரிமுத்து. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாட்டுப் பொங்கல் அன்று, கோயிலில் பூஜை செய்வது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருதரப்பினரும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், விசாரணை செய்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாரிமுத்து தரப்பை சேர்ந்த கருப்புசாமி என்பவர், அங்கமுத்துவின் அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை கட்டி வைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தாய் சென்ற போது, அவரையும் தாக்கி உள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், 5 பெண்கள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Women ,conflict ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது