×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி சாலையில் தொடரும் விபத்து

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.20: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், உயிர்பலியை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து மெணசி செல்லும் சாலையில், மோளையானூர் ஊராட்சிக்குட்பட்ட பாலக்காடு பகுதியில் தார்சாலை வளைந்து நெளிந்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

இந்த சாலை வழியாக தினசரி 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலை மிகவும் வளைவாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் திரும்ப முடியாமல் தினசரி விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : accident ,Papasettipatti ,Menassi ,road ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!