தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்ட ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் அலுவலக திறப்பு விழா தர்மபுரியில் நடந்தது. அகில இந்திய துணைத் தலைவர் சங்கர் திறந்து வைத்து, சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், கோவிந்தராஜ், பாலமுருகன், அருள்நாதன், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.