திருக்காட்டுப்பள்ளி, ஜன. 20: தஞ்சை மாவட்டம் பூதலூரில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தியாகம் தொண்டு நிறுவனம் ஆனந்த் வரவேற்றார். மக்கள் உரிமை கூட்டமைப்பு புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். இதில் அய்யங்கார் பேக்கரி உரிமையாளர் செந்தில், விடுதலை தமிழ் புலிகள் கட்சி பூதலூர் நகர செயலாளர் மின்னல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.