×

கொள்ளிடத்தில் தமிழ்புத்தாண்டு பொங்கல் விழா

கொள்ளிடம், ஜன.20: நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி கொள்ளிடம் கடைவீதியில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, திருவள்ளுவர் ஆகியோர் திரு உருவ படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய தி.க செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாகிகள் சந்தானகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சமூக ஆர்வலர் காமராஜ், விவசாய சங்க துணை செயலாளர் பாக்கியராஜ், சுந்தரலிங்கம், ராஜாராமன், பாண்டியன், ரவி, பிச்சை, புகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புத்தூர், தைக்கால், மாதிரவேளூர், பெரம்பூர் ஆகிய இடங்களிலும் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Tamil Pongal Festival ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...