×

வடிவேல் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் திறந்து கிடக்கும் கேட்வால்வு தொட்டியால் விபத்து அபாயம்

கரூர், ஜன. 20: கரூர் கோவை சாலை வடிவேல் நகர் அருகே மேல்நிலை தொட்டி அருகே திறந்த நிலையில் உள்ள மெகா சைஸ் கேட்வால்வு பள்ளத்தினை மூட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோவை சாலையில் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர்ப்பகுதியின் சாலையோரம் இந்த பகுதி குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டியின் கீழ்ப்புறம் சாலையோரம் மெகா சைஸ் கேட்வால்வு பள்ளம் உள்ளது. குடிநீர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் இந்த கேட்வால்வு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகளவு வாகன போக்குவரத்தும், அதிகளவு குடியிருப்பு பகுதிகள் உள்ள சாலையோரம் திறந்த நிலையில் இந்த பள்ளம் உள்ளதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சிலாப் கொண்டு மூட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு திறந்த நிலையில் உள்ள இதனை மூட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : overhead tank ,Vadivel Nagar ,
× RELATED கிராம ஊராட்சி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்