×

ஆண்டாங்கோவில் ஜீவா நகர் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகம்

கரூர், ஜன. 20: கரூர் ஆண்டாங்கோயில் ஜீவா நகர்ப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாத நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோவை சாலையில் ஆண்டாங்கோயில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து பெரியார் நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இதில் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் ஜீவா நகர் உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது தண்ணீர் வசதி பற்றாக்குறை, உட்கட்டமைப்புகள் சிதிலமடைந்தது என்பன போன்ற பல்வேறு காரணங்களால் இது செயல்படாத நிலையில் உள்ளது. இதனை திரும்பவும் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஜீவா நகர்ப்பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Jeeva Nagar ,
× RELATED பாஜ கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றம்