கரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று காலை சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நின்று கொண்டிருந்த குறைந்த தூரம் செல்லும் குளிர்சாதன பேருந்தில் உள்ள பயணிகளிடம் சென்ற அமைச்சர், பயணிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பேருந்தில் உள்ள தானியங்கி கதவுகள் முறையாக இயங்குகிறதா என்பதும் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த திடீர் ஆய்வு காரணமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.