×

தனித்தனி சம்பவத்தில் இளம்பெண், மூதாட்டி, ஊழியர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை, ஜன. 20: தனித்தனி சம்பவத்தில் இளம்பெண், மூதாட்டி, ஊழியர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் சரண்யா(17). இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சரண்யாவிற்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வலி அதிகமானதால் மனம் உடைந்து காணப்பட்ட சரண்யா எலிபேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் சரண்யாவின் தாய் தமிழ்செல்வி(45) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி சின்னம்மாள்(55)/ சம்பவத்தன்று இவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் இதே கிராமத்தில் உள்ள முள்வேலி மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் சின்னம்மாள் மகன் தவபாலன் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் சடையப்பிள்ளை வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: திருக்கோயிலூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(30). இவர் வானூர் அருகே உள்ள ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் வாட்டர் கம்பெணியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் ஆந்திராவில் உள்ள தனது மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் பணிபுரிந்த கம்பெனியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : incident ,teenager ,grandfather ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...