×

தென்காசி மேலசங்கரன்கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம்

தென்காசி, ஜன. 19:  தென்காசி காசி விசுவநாதசுவாமி கோயிலுடன் இணைந்த மேலச்சங்கரன்கோயிலில் உலக நன்மைக்காக ருத்ர ஏகாதசி சிறப்பு ஹோமம் நடந்தது. தென்காசி ஆனைப்பாலம் அருகில் உள்ள மேலசங்கரன்கோயிலில் நேற்று ருத்ர ஏகாதசியை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஏகாதசி ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை விருதுநகர் சுப்பையாபட்டர் மற்றும் மேலச்சங்கரன்கோயில் அர்ச்சகர் கோமதிநடராஜ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர்.  முன்னதாக தஞ்சாவூரை சேர்ந்த பெண் கலைஞர்களின் நாதஸ்வர குழுவினரின் நாதஸ்வரம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : home ,world ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...