×

மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில், ஜன. 19: பனவடலிசத்திரத்தை சேர்ந்த பெரியமுத்து மகன் மணிகண்டன் (29). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 15ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றபோது மணிகண்டன் திடீரென மாயமானார். புகாரின் பேரில் பனவடலிசத்திரம் போலீசார் தேடிவந்த நிலையில்,தெற்கு பனவடலி விலக்கு அருகே பதிபூரணம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், மணிகண்டன் நேற்று காலை சடலமாக மிதந்தார். தகவலறிந்து விரைந்துசென்ற பனவடலிசத்திரம் போலீசார், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பார்வதிநாதன் தலைமையிலான காரல்மாக்ஸ்,  கருப்பசாமி, செல்வகுமார், முருகன்  உள்ளிட்ட வீரர்கள் துணையுடன் மணிகண்டன் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Corpse recovery ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...