×

வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கோவை, ஜன.19: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் வினோத்(30). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்றுமுன் தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுஉள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வினோத் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மர்ம  நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்