×

நடன கலைஞர் மயங்கி விழுந்து பலி

ஈரோடு, ஜன.19: மதுரை கிருஷ்ணாபுரம், 4வது தெருவை சேர்ந்தவர் திருப்பதிராஜபாண்டியன் (42). இவரது மனைவி காயத்ரிதேவி (37). இருவரும் நடன கலைஞர்கள். அடிக்கடி வெளியூர் சென்று நடன நிகழ்ச்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு கவுந்தப்பாடி விஐபி நகரில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் பங்கேற்றனர்.அப்போது, திருப்பதி ராஜபாண்டியன் தனது குழுவினருடன் பாடலுக்கு நடனமாடிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கியபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு