×

விபத்தில் 2 பேர் பரிதாப பலி

பண்ருட்டி, ஜன. 19:  பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (55). இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக பைக்கில் பெரியகாட்டுப்பாளையம் சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது, வேலன்குப்பம் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்:  பண்ருட்டி அருகே முத்தரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (35). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கமலா (30), மகள் அனுஷ்கா (9) ஆகியோருடன் சி.என்.பாளையம் மலைக்கோயில் திருவிழாவுக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார. அப்போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி, மகள் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...