×

கல்வெட்டை சேதப்படுத்தி மரங்கள் ெவட்டி சாய்ப்பு

அயோத்தியாபட்டணம், ஜன.19: அயோத்தியாபட்டணம் அருகே கல்வெட்டை சேதப்படுத்தியும், மரங்களை ெவட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் அரசு கல்வெட்டு உள்ளது. இதை நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்தும், அருகில் இருந்த மரங்களை வெட்டி சேதப்படுத்தினர். மேலும் கடைக்கு வெளியில் இருந்த மரப்பலகைகள் உடைத்து சாலைகளில் போட்டு சென்றனர். இதுகுறித்து திமுக ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் மேகலா தேவேந்திரன் பார்வையிட்டனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில் பொதுச்சொத்துக்களை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்