×

துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி


ராசிபுரம், ஜன. 19:  நாமகிரிப்பேட்டையில் மொட்டை மாடியில் துணி காய வைத்த போது, அருகில் சென்ற மின்கம்பியில் துணி பட்டு மின்சாரம்  தாக்கியதில், பெண் பலியானார்.  நாமகிரிபேட்டை நடுவீதியை சேர்ந்த மஞ்சள் வியாபாரி தாமோதரன். இவரது மனைவி தீபகுமாரி(34). இந்நிலையில் தீபகுமாரி நேற்று வீட்டில் துணிகளை துவைத்து, அதனை வீட்டின் மொட்டை மாடிக்கு எடுத்துச்சென்று காயடைவத்தார். அப்போது துணி காயவைக்கும் கம்பிக்கு அருகில் சென்ற மின்கம்பியில் ஈரத்துடன் கூடிய துணிபட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தீபகுமாரி தூக்கி வீசப்பட்டு கீழே  விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராசிபுரம்  அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீபகுமாரி  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது