×

பொங்கல் விளையாட்டு போட்டி

தஞ்சை, ஜன. 19: தஞ்சை அருகே பூதலூர் அக்ரஹாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அக்ரஹாரத்தை சேர்ந்த 22 இளைஞர்கள் கிராமத்தில் ஒற்றுமை தழைக்க வேண்டி பொங்கல் போட்டிகளை நடத்தினர். தாங்களே செலவு செய்து இப்போட்டிகளை நடத்தியதை கிராம மக்கள் பாராட்டினர். பெண்களுக்கான கோலப்போட்டி, முதியோருக்கான நடை போட்டி, இளைஞர்களுக்கு உறிப்பானை உடைக்கும் போட்டி, குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தய போட்டி, சாக்கு போட்டிகள் நடைபெற்றது. போட்டி நடுவராக விண்ணமங்கலம் ரவி செயல்பட்டார். கோலப் போட்டியில் வெற்றி பெற்ற அலமேலு முருகேசன் முதல் பரிசையும், கவிதா 2ம் பரிசையும், ஜெயலட்சுமி 3ம் பரிசையும் வென்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பானை உடைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 36 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களை கிராம முக்கியஸ்தர்கள் பாலசுப்பிரமணியன், ராஜாமுகமது ஆகியோர் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.

Tags : Pongal Game Match ,
× RELATED பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா