×

குடந்தை உழவர் சந்தை அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கும்பகோணம், ஜன. 19: கும்பகோணம் உழவர் சந்தை அருகே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தை துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் மூக்கை மூடியவாறு சென்று வருகின்றனர். எனவே உழவர் சந்தை அருகில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : farmer's market ,Kundanai ,
× RELATED கரூர் உழவர் சந்தை அருகே இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்