×

காங்கிரஸ் வலியுறுத்தல் குடந்தை அருகே டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

கும்பகோணம், ஜன. 19: கும்பகோணத்தை அடுத்த மாங்குடி வளையப்பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் முகிலன் (எ) விக்னேஸ்வரன் (25) இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் தர்மராஜ் மகன் விக்னேஸ்வரன் (23). கடந்த 17 ம் தேதி இரவு, பொங்கல் விளையாட்டு விழா நடத்தியது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதானால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், தான் வைத்திருந்த கத்தியால், முகிலன் (எ) விக்னேஸ்வரனின் முதுகு மற்றும் விலாவில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Congressman ,
× RELATED குடியுரிமை சட்டத்திற்கு எதிராக...