×

பொன்னமராவதியில் தச்சு தொழிலாளி வீட்டில் தீ விபத்து ரூ.1லட்சம் பொருட்கள் சேதம்

பொன்னமராவதி, ஜன.19: பொன்னமராவதியில் மின்கசிவு எற்பட்டு ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின. பொன்னமராவதி வலையபட்டி 1நம்பர் ரோட்டில் வசித்து வருபவர் ஜெயக்குமார். தச்சு தொழிலாளி. இவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரியத் தொடங்கியது. அருகில் இருந்த செல்லம்மாள் வீட்டிற்கும் தீ பறவியது. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இத்தீயில் முக்கிய ஆவணங்கள், துணிகள், தளவாடச் சாமான்கள் தீயில் கருகி சேதமாயின. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு, ஆர்.ஐ.ஜோதி, விஏஓ ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : carpenter ,house ,Ponnamaravathi ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி