×

மீமிசலில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கண்டன பேரணி

அறந்தாங்கி, ஜன.19: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மீமிசலில் அனைத்து கட்சியினர் சார்பாகவும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. பேரணி கோபாலப்பட்டினம் பகுதியிலிருந்து தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து மீமிசல் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பின்னர் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மே17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி, அய்யாவழி பாலமுருகன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரிப், மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இந்த பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் அனைவரும் தேசிய கொடியை ஏந்தியும் குடியுரிமை மசோதாவிற்கு எதிரான பாதகைகளையும் ஏந்தியபடி சென்றனர்.

Tags : Protest Against Citizenship Amendment ,
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி