×

கறம்பக்குடியில் இருவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கறம்பக்குடி, ஜன.19: கறம்பக்குடி அருகே கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (37). இவரது நண்பர் மயிலாடிதெருவை சேர்ந்த மற்றொரு முருகேசன்(36). இருவரும் டைலர். தஞ்சையில் உள்ள தையல் கடையில் வேலை பார்த்து வரும் இவர்கள் தினமும் அம்புக்கோவில் முக்கம் சாலையில் உள்ள டூ வீலர் ஸ்டாண்டில் பைக்கை வைத்து விட்டு பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கல் அன்று வேலைக்கு சென்று விட்டு தங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்து விட்டு திரும்பினர். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த கறம்பக்குடி மேல ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மாற்று திறனாளி வாலிபர் தனபால் (38) மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோர் முருகேசன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரிடம் தகராறு செய்து இருவரையும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு, கழுத்து, கை, கன்னம் போன்ற பகுதியில் குத்தியுள்ளார். காயம் அடைந்து இருவரையும் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனபால் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு தனபாலை கைது செய்து சிறையில் அடைத்தார். ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...