×

கறம்பக்குடி காவல் நிலையத்தில் நடிகர் ரஜினி மீது புகார்

கறம்பக்குடி, ஜன.19: சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடை பெற்ற பேரணியில் ராமர் சீதை ஆகியோரை இழிவுப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறி இருந்தார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நடிகர் ரஜினி காந்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் புகார் அளித்து வருகின்றனர். அதன்படி கறம்பக்குடி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் புகார் மனு அளித்தனர்.

Tags : Rajini ,police station ,Karambakkudy ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து