×

பொன்னமராவதியில் அறிவிப்பில்லாத மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

பொன்னமராவதி, ஜன.19: பொன்னமராவதியில் நேற்று 3மணி நேரம் மின்தடையால் வர்த்தகர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டனர். பொன்னமராவதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். இந்த நாட்களில் மின்சாரம் இருந்தால்தான் வர்த்தகர்கள் வியாபாரம் சிரமம் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும். ஆனால் நேற்று 18ம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மதியம் 3மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டனர். ஆகவே மின்சார அலுவலகத்திற்கு போன் செய்தால் போனை எடுப்பதே இல்லையாம். ஆகவே பொதுமக்களின் நலன் கருதி மின்சாரத்துறையினர் போனை எடுத்து உரிய காரணத்தை சொல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு