×

கந்தர்வகோட்டை அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

கந்தர்வகோட்டை, ஜன.19: கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டியில் இளம்பெண்ணை அவதூறாக பேசி தாக்கிய இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டியை சேர்ந்த அன்பழகன் மனைவி சத்தியா. இவர் மாட்டுபொங்கலன்று இரவு தனது வீட்டு வாசலில் எச்சில் துப்பியுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் தங்களை பார்த்து துப்பியதாக கூறி சத்தியாவை அவதூறாக பேசி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சத்தியா கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் இளந்தமிழன்(19), பாரதி (22), சின்ராஜ் (20) மற்றும் பவுன்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gandharvagoda ,
× RELATED கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக்...