×

மயிலாடுதுறை அருகே வாலிபரை கட்டி வைத்து தாக்கிய 7பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை, ஜன.19: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செஞ்சி பெரியதெரு வழியாக, கேசிங்கன் பகுதியை சேர்ந்தவரும் மணல்மேடு காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி, ஆயுதத்தால் மிரட்டல் வழக்குகளில் உள்ளவருமான வையாபுரி மகன் பாண்டியன்(37) என்பவர் சென்று கொண்டிருந்தார், செஞ்சி பகுதியை சேர்ந்த அப்பாதுரை மகன் நாகராஜ்(49) மற்றும் அவரது குடும்பத்தார் ஊர்க்காரர்கள் சேர்ந்துகொண்டு எங்கள் ஊருக்கு ஏன் வந்தாய் இந்தப்பக்கம் வரக்கூடாது என்று கேட்டுள்ளனர். ஏன் என்னை வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டு வம்பு வளர்த்துள்ளார்.

இதனால் ஒருவருக்கு ஒருவர் கைகலப்பு ஏற்பட்டது, பாண்டியனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர். அவருடன் வந்திருந்த கதிராமங்கலம் மணி மகன் பிரேம்குமார்(49) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட குத்தாலம் போலீசார் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாண்டியன் அளித்த புகாரின்பேரில் நாகராஜ்(49), அவரது மகன் ஜெயசீலன்(22), செல்வராஜ் மகன் மாரிமுத்து, மயிலாடுதுறை எரகளித்தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் இளவசரன்(27) ஆகியோரைக் கைது செய்தனர், மேலும் நாகராஜன் மனைவி கவிதா, அப்பாதுரை மகன் மதியழகன், மதியழகன் மனைவி மலர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

Tags : persons ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக...