×

அரச மர வேர்களுக்கு நடுவில் விநாயகர் பூலாம்வலசில் சேவல் சண்டை போட்டி நிறைவு சேவல் காலில் கத்தி, பணம் கட்டி பந்தயம் நடத்திய 31 பேர் கைது

அரவக்குறிச்சி, ஜன. 19: பூலாம்வலசில் சேவல் சண்டை போட்டி நிறைவடைந்தது. கத்தியை கட்டியும், பணம் கட்டியும் பந்தயம் நடத்திய 31 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் சேவல் சண்டை நடந்து வந்தது. நேற்றுடன் போட்டி நிறைவடைந்தது. போட்டியில் பந்தயம் கட்டக் கூடாது, சேவல் காலில் கத்தியை கட்டக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை மீறி சேவல் காலில் கத்தியை கட்டி பந்தயத்தில் ஈடுபட்ட பூலாம்வலசை சேர்ந்த ரஞ்சித்(30), வடிவேல்(40), ஆறுமுகம்(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பூலாம்வலசில் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்ட பிரவீன்(24), தங்கமுருகன்(35) உள்பட 23 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் இறுதி நாளான நேற்று பணம் கட்டி பந்தயம் நடத்தியதாக பூலாம்வலசை சேர்ந்த மணிகண்டன்(30), மாதவன்(25), வீரக்குமார்(27), கோபால்(28), காந்தி(65), முனிராஜ்(22), கார்த்தி(28), ஜெயராம்(50) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : gang ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை