×

நளினி- முருகன் சந்திப்பு வேலூர் பெண்கள் சிறையில்

வேலூர், ஜன. 19:வேலூர் பெண்கள் சிறையில் நளினி- முருகன் சந்திப்பு நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, 15 நாட்ளுக்கு ஒருமுறை இருவரும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

அதன்படி, நேற்று காலை மத்திய சிறையில் உள்ள முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 9.05 மணி முதல் 10.05 மணி வரை 1 மணி நேரம் நளினியை சந்தித்து முருகன் பேசினார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

Tags : Nalini ,women ,Murugan ,jail ,Vellore ,
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...