இளையான்குடி, ஜன.19: இளையான்குடி பகுதியில் ஊடுபயிராக நாட்டு மல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நெல், மிளகாய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் டேங்கர் மற்றும் டிராக்டரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மிளகாய் செடிகளை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர்.
தற்போது மிளகாய் செடிக்கு காலநிலை உள்ளதால் இளையான்குடி பகுதியில் உள்ள சாலைக்கிராமம், சூராணம், விசவனூர், முனைவென்றி, சாத்தனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடையே நாட்டு மல்லி சாகுபடி செய்யும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிரிடப்பட்ட மிளகாய் வயல்களில், ஊடுபயிராக நாட்டு மல்லியை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.