×

மதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது

திருவொற்றியூர்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர், ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து, விற்பதாக திருவொற்றியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வீட்டில் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சுரேந்தர் (52) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற திருவொற்றியூர், நந்தி ஓடையை சேர்ந்த ராமச்சந்திரன் (58) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 15 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...