×

இரவில் வாட்டும் பனி

சிவகங்கை, ஜன.14: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் கண்மாய், குளங்களில் தண்ணீர் தேங்கி விவசாய பணிகள் நடைபெற்றது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. இந்நிலையில் மழை சீசன் முடிந்த நிலையில் தற்போது இரவில் பனி நடுங்க வைத்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் கடும் குளிர் மறுநாள் காலை 6 மணிவரை நீடிக்கிறது. இதனால் 6 மணிக்கு மேல் முதியவர்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்குகின்றனர். குழந்தைகளையும் வெளியே விடாமல் பெற்றோர்கள் பாதுகாத்து வருகின்றனர். கடும் குளிரையொட்டி மாவட்டத்தில் ஆங்காங்கு வடமாநில நபர்களிடம் ஸ்வெட்டர், போர்வை விற்பனை சூடுபிடித்துள்ளது.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்