×

சமூக விரோதிகளின் கூடாரமாகிறது சூதாடிய 11 பேர் கைது ரூ.11 ஆயிரம் பறிமுதல்

விருதுநகர், ஜன. 14: விருதுநகர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் அருகே வெள்ளுரில் கோயில் அருகில் முனியாண்டி (60), எஸ். முனியாண்டி (55), அழகர்சாமி (62), ஊர்காவலன் (51) ஆகியோர் பணம் வைத்து சூதாடினர். இவர்கள் 4 பேரையும் ஆமத்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.8,605ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல, ராமலிங்காபுரம் மேல்நிலைத்தொட்டி அருகில் முனியசாமி (40), முத்து (51), திருமுருகன் (34), கணேசன் (41), சுந்தர் (36) ஆகியோர் வெட்டு சீட்டு விளையாடினர். இவர்களை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1,970ஐ பறிமுதல் செய்தனர்.ராமலிங்காபுத்தில் ஊர்ச்சாவடி பின்புறம் ராமமூர்த்தி (34), கருப்பசாமி (32) ஆகியோர் பணம் வைத்து சூதாடிய போது, வச்சக்காரப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து, ரூ.ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மூன்று இடங்களில் மொத்தம் 11 பேரை கைது செய்த போலீசார், ரூ.11,305ஐ பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது