×

கடலில் மூழ்கி மாணவன் பலி

துரைப்பாக்கம், ஜன.14: கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (15). மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று முன்தினம் முகமது இஸ்மாயில், பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் கானத்தூர் கடற்கரைக்கு சென்றான்.
அங்கு நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி முகமது இஸ்மாயில், கடலில் மூழ்கினான். இந்நிலையில், நேற்று காலை முகமது இஸ்மாயில் சடலம் அதே பகுதியில் கரை ஒதுங்கியது.தகவலறிந்து கானத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : Student ,sea ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...