×

காவலர், வாலிபரை வெட்டிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி, ஜன. 14:  காவலர் மற்றும் வாலிபரை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி பஜார் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (29).  அங்கு உள்ள பூக்கடையில் மாலை கட்டுபவராக வேலை செய்து வருகிறார். பஜார் பகுதியில் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ராஜேஷ் நின்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை சுற்றி வளைத்து ஆயுதங்களால் வெட்டினர். இதில் அவரது வயிற்றில் காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீஸ்காரர் ரஞ்சித் சம்பவ இடத்துக்கு சென்று கும்பலிடம் சிக்கியிருந்த ராஜேஷை மீட்க முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் மற்றும் ராஜேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து  முனுசாமி (25) மற்றும் நரேஷ் (26) ஆகியோரை  நேற்று கைது செய்தனர். இதுகுறித்து மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : men ,policeman ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்