×

தொழில் தொடங்குவதாக கூறி கம்பெனி அதிபரிடம் ₹62 லட்சம் மோசடி

ஆவடி, ஜன. 14: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனி அதிபரிடம்  தொழில் தொடங்குவதற்காகக் ரூ.62 லட்சம் வாங்கி மோசடி செய்த உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலையில் கம்பெனி நடத்தி வருபவர் பிரகாஷ்குமார் (38). இவர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தில் வசிக்கிறார். இவரது உறவினர் பார்த்திபன் ஈரோடு மாவட்டம், பவானியில் வசிக்கிறார்.

இதற்கிடையில் பார்த்திபன், புதிதாக தொழில் தொடங்க பிரகாஷ்குமாரிடம்  பணம் உதவி கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து, 2012 முதல் 2016ம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபனுக்கு ரூ.62 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அவர், வாங்கிய பணத்தை தொழில் தொடங்க பயன்படுத்தவில்லை.
தகவலறிந்த பிரகாஷ்குமார் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு பார்த்திபனிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை கொடுக்க மறுத்ததோடு  கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்குமார், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம்  புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தீபனை தேடி வருகின்றனர்.

Tags : company president ,
× RELATED கம்பெனி அதிபர் கொலை வழக்கு சம்பளம்...