×

ஆவடி அருகே ஏரியில் மூழ்கி மெக்கானிக் பலி

ஆவடி, ஜன.14: ஆவடி அருகே அரக்கம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் நண்பருடன் குளித்த மெக்கானிக் தண்ணீரில் மூழ்கி பலியானார். அம்பத்தூர், கல்யாணபுரம், பஜனை கோவில் தெருவைசேர்ந்தவர் பரத்குமார் (24).  கார் மெக்கானிக்.  நேற்று முன்தினம் மாலை பரத்குமார், நண்பருடன் ஆவடி அருகே அரிக்கம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரிக்கு குளிக்கச் சென்றார். அப்போது,  அவர் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை அடுத்து பரத்குமாரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். முடியாததால், தண்ணீரில் மூழ்கி உள்ளார்.

தகவல் அறிந்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் இறங்கி பரத்குமாரை தேடினர். ஆனால், இரவு நேரமாகிவிட்டதால் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை கைவிட்டு விட்டுச் சென்றனர். பின்னர், நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் வந்து ஏரியில்  மீண்டும் தேடி உடலை மீட்டனர்.
புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பரத்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : lake ,Avadi ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு