×

பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடிய ஆட்சியர்

விழுப்புரம், ஜன. 14: விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழாவில் ஆட்சியர் அண்ணாதுரை கலந்து கொண்டார். தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினார்கள். விழுப்புரம் காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனி தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.

இதேபோல் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு மாணவர்களுடன் பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.

Tags : Pongal ,school ,college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...