×

குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் பதவியேற்பு

புதுக்கோட்டை, ஜன.14: குமாரகிரி பஞ்சாயத்து தலைவராக ஜாக்சன் துரைமணி பதவி ஏற்றார்.    குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜாக்சன் துரைமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் குமாரகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். பொது மக்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் அவர் கூறுகையில், ‘தனக்கு வாக்களித்த அனைவருக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குமாரகிரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன். பொதுமக்கள் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் குமாரகிரி பஞ்.துணைத்தலைவராக  முப்புலியன் வெற்றி பெற்றார்.

Tags : Kumaragiri ,panchayat ,president ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு