×

ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை, ஜன.14: கோவை பீளமேடு அருகேயுள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் ரேணுகா (31). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் வீட்டிறகு இவரது உறவினரான பீளமேட்டை சேர்ந்த கார்த்திக் (45) வந்தார். அப்போது ரேணுகா பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். வீட்டின் சாவியை கார்த்திக்கிடம் ஒப்படைத்தார். திரும்ப ரேணுகா வந்த போது கார்த்திக்கை காணவில்லை. வீட்டில் இருந்த பீரோ திருந்து கிடந்தது. பீரோவில் இருந்த 1.80 லட்ச ரூபாய் மற்றும் 8.5 பவுன் தங்க நகையை காணவில்லை. கார்த்திக் நகை, பணத்துடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. அவரை தேடி சென்ற போது அவர் வேறு எங்கே சென்று விட்டார்.இது தொடர்பாக ரேணுகா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...