×

வாசவி கல்லூரியில் பொங்கல் விழா

ஈரோடு, ஜன.14: ஈரோடு  வாசவி கல்வியியல் கல்லூரி பொங்கல் விழா கல்லூரி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் புஷ்பலீலா வரவேற்றார். ஈரோடு இன்னர்வீல் கிளப் தலைவர் நிர்மலா ராஜரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி பொங்கலிட்டு விழாவை துவக்கி வைத்தார்.கல்லூரி செயலாளர் ராஜரத்தினம் சிறப்புரை வழங்கி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். நேற்று மாலை பொங்கல் விளையாட்டு தின பரிசளிப்பு விழா நடந்தது. வாசவி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சிவகுமார் தலைமை வகித்தார். கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் ஆறுமுகம் சிறப்புரை வழங்கி வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
வாசவி கல்லூரியின் கணிதவியல் துறை துணைப்பேராசிரியர் அபிராமி அவர்கள் நன்றி கூறினார். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pongal Festival ,Vasavi College ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா