×

விஷ்ணம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சி

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 14: திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை ஓடமனை தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் உள்ளது. வழக்கம்போல் சங்க செயலாளர் நேற்று முன்தினம் மாலை அலுவலக கதவை பூட்டி சென்றார். நேற்று காலை அலுவலகத்துக்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோவின் கதவும் திறந்து கிடந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் விஷ்ணம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்பழகன்(53) புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகிறார். புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தி திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பையிரிதிராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால் பாஸ் போன்ற மருந்துகள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்