×

சாலை விபத்தில் ஆசிரியர் படுகாயம்

அரியலூர், ஜன. 14: தா.பழூர் அருகே உள்ள அனைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூவ்காந்தி (40). இவர் விளாங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக ராஜூவ்காந்தி அரியலூருக்கு பைக்கில் சென்றார். அரியலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த கார், ராஜூவ்காந்தி ஓட்டி வந்த பைக்கின் பின்புறம் மோதியது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில் ராஜூவ்காந்தி படுகாயமடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் கயர்லாபாத் எஸ்ஐ ராஜவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவ்காந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Teacher ,road accident ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...