×

தாந்தோணிமலை- ஏமூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், ஜன. 14: குண்டும் குழியுமாக உள்ள ஏமூர் சாலை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே ஏமூர், ஏமூர் நடுப்பாளையம், திருச்சி பைபாஸ் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், சாலையில் சென்று வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Motorists ,pit road ,Thanthonimalai-Amur ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...