×

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் 2 பேர் கைது

வேதாரண்யம், ஜன.14: வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தில் 9 வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (23) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த சிறுமி விடுமுறையில் திருவாரூர் மாவட்டம், களப்பாலில் உள்ள தனது பாட்டிவீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த சக்திவேல் அந்த சிறுமியை அழைத்து வர அச்சிறுமியின் உறவினரான பன்னாள் கிராமத்தை சேர்ந்த நண்பர் கபிலன் (25) என்பவரை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வந்தனர். பின்னர் சக்திவேலின் பாட்டிவீடான பஞ்சநதிக்குளம் கிராமத்தில் வைத்து தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அறிந்த அச்சிறுமியின் உறவினர் சிறுமியை மீட்டு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் வழக்குபதிவு செய்து சக்திவேல் (23), கபிலன் (25) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : rape ,
× RELATED புதுச்சேரியில் கொடூரம்: பாலியல்...