மயிலாடுதுறை, ஜன.14:மயிலாடுதுறையில் பேருந்து பயணிகளிடம் திருடும் ஆந்திர பெண்களை மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை பழையபேருந்து நிலையம் அருகே உள்ள டாக்சி ஸ்டேன்டு வழியாக மயிலாடுதுறை பட்டமங்கல மேலத்தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி கல்யாணி(70) என்பவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு பெண்கள் அவரிடம் நைசாக பேசி அவர் வைத்திருந்த பையில் கையை விட்டு ரூ.300 எடுத்து வேறொறு பெண்மணியிடம் கொடுத்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் விசாரித்ததில் ஆந்திரமாநிலம் புத்தூர் தங்கம்மா தெரு ராஜி மனைவி அம்மு(25), வெற்றிவேல் மனைவி முத்துமாரி(23) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது என தெரியவந்தது. இருவரையும் மயிலாடுதுறை போலீசார் கைது செய்து காவலில் அடைத்தனர்.