×

பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

வலங்கைமான்,ஜன.14: வலங்கைமான் அடுத்த ஆவூர் கிராமத்தில் பைக்கில் சென்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆவூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் முருகதாஸ்(22).இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வீட்டில் இருந்து ஊத்துக்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது மரபட்டறை எதிரே சென்ற போது நிலை தடுமாறி தனக்கு தானே கீழே விழுந்து படுகாயம் அடைந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்த வாலிபர் முருகதாஸை குடந்தை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பலியானார்.இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்