×

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் காரின் கண்ணாடி உடைத்து லேப்டாப் திருட்டு

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரின் காரில் மர்ம ஆசாமிகள் கண்ணாடி உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். காரை அம்மனி அம்மன் கோயில் அருகே நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது, காரின் பின் இருக்கை கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காரில் சென்று பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த லேப்டாப்பை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : devotee ,Swami ,Annamaliyar temple ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்